பிஎஸ்என்எல் நிறுவனம், இந்தியா முழுவதும் 4ஜி மற்றும் 5ஜி கட்டமைப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அதற்கான உபகரணங்கள் வழங்கல் மற்றும் வருடாந்திர பராமரிப்பு சேவைகள் வழங்குதல் ஆகியவற்றுக்கு, தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனம் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி மற்றும் 5ஜி கட்டமைப்புகளை வழங்க டிசிஎஸ் நிறுவனத்துடன் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போது, டிசிஎஸ் நிறுவனத்திடம் இருந்து முக்கிய ஒப்பந்தத்தை தேஜஸ் நெட்வொர்க்ஸ் வென்று உள்ளது. கிட்டத்தட்ட 7492 கோடி மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தேஜஸ் நெட்வொர்க்ஸ் அறிவித்துள்ளது. அதன்படி, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களுக்கு, மின்னணு சாதனங்களை தேஜஸ் நெட்வொர்க்ஸ் வழங்கும். இதுகுறித்து தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆனந்த் ஆத்ரேயா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தேஜஸ் நெட்வொர்க்ஸ் நிறுவனத்தில், டிசிஎஸ் 52.45% பங்குகளை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.