தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னையில் இருந்து மதுரைக்குச் செல்லக்கூடிய தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்றுசெல்ல வேண்டும் என பயணிகள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தேஜஸ் விரைவு ரெயில் இனி தாம்பரத்தில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 26-ம் தேதி முதல் தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரத்தில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மத்திய இணை மந்திரி எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.