கோவில் மாடுகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது.
தெலுங்கானாவில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ராஜராஜேஸ்வர சுவாமி கோவிலில் பக்தர்கள் நேர்த்திக்கடனுக்காக பசு மற்றும் எருதுகளை தானமாக வழங்கி வரும் நடைமுறை உள்ளது. இங்கு தானமாக பெரும் மாடுகளை வளர்ப்பதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் கோசோலை அமைக்கப்பட்டு 300 மாடுகள் பராமரிக்கும் அளவு கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இங்கு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மாடுகளை பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இப்போது அங்கு 2500 மாடுகள் உள்ள நிலையில் 450 முதல் 500 மாடுகள் மட்டுமே பராமரிக்கப்பட்ட வசதிகள் உள்ளது. எனவே மீதமுள்ள மாடுகளை ஏழை விவசாயிகள் மற்றும் இந்து அமைப்புகளுக்கு இலவசமாக கொடுக்க தெலுங்கானா அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான விண்ணப்ப படிவங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் வழங்கப்பட்டு வருகின்றன