தெலுங்கானாவில் மயோனைஸ் விற்பனைக்கு தடை விதிக்க பரிசீலனை நடைபெற்று வருகிறது.
தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் மயோனைஸ் நிரப்பப்பட்ட சவர்மா சாப்பிட்ட 4 பேருக்கு கடுமையான வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அடுத்தடுத்து 10 இடங்களில் மயோனைஸ் சாப்பிட்ட 10 பேர் பிறகு இதேபோல் பாதிக்கப்பட்டனர். இது உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளது. மேலும் அங்கு மயோனைஸ் தயாரிப்பில் பாக்டீரியாக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது, இதனால் அரசுப் பொறுப்பாளர்கள் முட்டை மயோனைஸ் விற்பனைக்கு தடை செய்ய பரிசீலனை செய்து வருகின்றனர்.