பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை

May 13, 2023

பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளில் கோடிக்கணக்கானோர் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேசில் நாட்டு அரசாங்கத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக டெலிகிராம் செயலி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசாங்கத்தை விமர்சிக்கும் தவறான பதிவுகளை டெலிகிராமில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் டெலிகிராம் செயலி பிரேசிலில் 72 மணி நேரம் முடக்கப்படும். மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் டெலிகிராம் நிறுவனம் சுமார் ரூ.82 லட்சம் அபராதம் செலுத்த […]

பிரேசிலில் டெலிகிராம் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் கோடிக்கணக்கானோர் டெலிகிராம் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரேசில் நாட்டு அரசாங்கத்துக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக டெலிகிராம் செயலி மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அரசாங்கத்தை விமர்சிக்கும் தவறான பதிவுகளை டெலிகிராமில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் டெலிகிராம் செயலி பிரேசிலில் 72 மணி நேரம் முடக்கப்படும். மேலும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் டெலிகிராம் நிறுவனம் சுமார் ரூ.82 லட்சம் அபராதம் செலுத்த வேண்டும் என பிரேசில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து டெலிகிராமில் ஒரு பதிவு வெளியிடப்பட்டுள்ளது. அதில் பிரேசில் தாக்குதலுக்கு உள்ளாகிறது. எனவே அங்கு போலி செய்தி மசோதா நிறைவேற்றப்பட்டால் பிரேசிலை விட்டு வெளியேற தயாராக இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu