தமிழகத்தில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழக வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி, மேற்கு திசை காற்றின் வேகமாறுபாட்டால், இன்று மற்றும் நாளை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் 22-ந்தேதி முதல் 26-ந்தேதி வரை கூடுதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வெப்பநிலை 38° செல்சியஸை கடக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேநேரம் மீனவர்கள் கடல் பயணங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.