மதுரை, சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் வெப்பம் சீறி எழுகிறது – 25ம் தேதிக்கு பிறகு மழை வாய்ப்பு.
தமிழகத்தில் வெப்பம் இயல்பைவிட 2–3 டிகிரி அதிகமாக பதிவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அதன்படி, மதுரை விமான நிலையத்தில் 40.2°C, மதுரை நகரில் 39.4°C, கடலூர், திருச்சி, சென்னை, ஈரோடு உள்ளிட்ட 7 இடங்களில் வெப்பம் 100 டிகிரிக்கு மேல் பதிவானது. கடந்த சில நாட்களாக கடல் காற்று வராததால் வெப்பம் அதிகமாக இருந்தது. தற்போது ஓரளவு காற்று வந்ததால் வெப்பம் குறைந்ததையும் உணர முடிகிறது. இந்நிலை ஜூன் 25 வரை நீடிக்கும் என்றும், அதன்பிறகு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.