தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இயல்பை விட 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருப்பத்தூரில் இன்று 39.1°C (102°F) வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்று முதல் மார்ச் 9-ந்தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை மேலும் 2°C உயரக்கூடும். அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பநிலை தொடர்ந்து உயரும் நிலையில், அது இயல்பை விட 3°C அதிகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் வரும் 2 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரியின் சில பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை நகரில் வெப்பநிலை 35-36°C வரை இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.