கர்நாடகாவில் லாரி விபத்தில் பலியானவர்களின் குடும்பத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டம் குமுதா பகுதியில் கோவில் திருவிழா நடப்பதற்காக காய்கறி வியாபாரிகள் ஏற்றிய லாரி விபத்துக்குள்ளானது. லாரி கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்து 10 வியாபாரிகள் உயிரிழந்தனர். மற்றவர்கள் படுகாயங்களுடன் உயிருக்கு போராடினர். பொதுமக்கள் மற்றும் போலீசார் உடனே மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் பலியான 10 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, காயம் அடைந்த 15 பேரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தார் மற்றும் PMNRF-ல் இருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் நிவாரணம், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் உதவியை அறிவித்தார்.














