நிதி நடவடிக்கை பணிக்குழுவில் இருந்து ரஷியா தற்காலிகமாக நீக்கம்

February 25, 2023

ரஷியாவின் உறுப்பினர் தகுதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக நிதி நடவடிக்கை பணிக்குழு இன்று தெரிவித்துள்ளது. சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கு, நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்.ஏ.டி.எப்.) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் பாரிஸ் நகரத்தில் செயல்படுகிறது. சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் கண்டறியப்பட்டால் அந்த நாடுகளை கருப்பு பட்டியலில் இந்த அமைப்பு வைத்து கண்காணிக்கும். இந்த பட்டியலில் இடம் பெறும் நாடுகள் உலக வங்கி, சர்வதேச […]

ரஷியாவின் உறுப்பினர் தகுதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக நிதி நடவடிக்கை பணிக்குழு இன்று தெரிவித்துள்ளது.

சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி அளிக்கப்படுவதைத் தடுப்பதற்கு, நிதி நடவடிக்கை பணிக்குழு (எப்.ஏ.டி.எப்.) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், பல்வேறு நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இதன் தலைமையகம் பாரிஸ் நகரத்தில் செயல்படுகிறது. சட்டவிரோத பணப்புழக்கம் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதியளித்தல் கண்டறியப்பட்டால் அந்த நாடுகளை கருப்பு பட்டியலில் இந்த அமைப்பு வைத்து கண்காணிக்கும். இந்த பட்டியலில் இடம் பெறும் நாடுகள் உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம் போன்ற பன்னாட்டு நிதி நிறுவனங்களிடமிருந்து நிதியுதவிகள் பெறுவதற்கும் மற்றும் பன்னாட்டு வணிகம் மேற்கொள்வதற்கும் தடைகள் விதிக்கப்படும். இந்நிலையில், ரஷியாவின் உறுப்பினர் தகுதியை தற்காலிகமாக ரத்து செய்துள்ளதாக நிதி நடவடிக்கை பணிக்குழு இன்று தெரிவித்துள்ளது.

உக்ரைன் மீதான படையெடுப்பு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழுவானது, 200-க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் அதிகார வரம்புகளுக்கு தரநிலைகளை ஏற்படுத்துகிறது. அத்துடன், போதைப்பொருள் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் பயங்கரவாதம் உள்ளிட்ட கடுமையான குற்றங்களை தடுக்க அதிகாரிகளுக்கு உதவுகிறது. பாதுகாப்பு மற்றும் உலகளாவிய நிதி அமைப்பின் ஒருமைப்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நிதி நடவடிக்கை பணிக்குழுவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிராக ரஷியாவின் நடவடிக்கைகள் இருப்பதாகவும், அவை ஏற்றுக்கொள்ள முடியாதவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிதி நடவடிக்கை பணிக்குழுவின் தரநிலைகளை செயல்படுத்துவதில் ரஷியா இன்னும் பொறுப்புடன் இருக்கவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 788

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu