தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்காக பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு சொந்த ஊருக்கு செல்ல பொதுமக்கள் மக்கள் சென்னையில் வெள்ளம்போல் திரண்டு வருகின்றனர். சென்னையிலிருந்து வெளியூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள், ஆம்னி பேருந்து, அரசு பேருந்து, சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில், சிறப்பு வந்தே பாரத் ரயில் ஆகிய அனைத்தும் நிரம்பிவிட்டன. சென்னையில் வழக்கமாக இயங்கும் 2100 பேருந்துகளும் கூடுதலாக 1895 பேருந்துகளும் இயக்கபடுகின்றன. மேலும் பயணிகள் வருகை அதிகரித்ததால் 138 பேருந்துகள் இயக்கப்பட்டது. ஒரே நேரத்தில் மக்கள் திரண்டதால் சென்னையில் 10 மணி நேரம் நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் நீடித்தது.