கோயம்பேடு - ஆவடி மெட்ரோ சேவைகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் கோரியுள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதற்கு நாளுக்கு நாள் பொதுமக்கள் இடையே அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் கோயம்புத்தூரில் இருந்து திருமங்கலம் முகப்பேர் வழியாக ஆவடி வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. தற்போது சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி- பரந்தூர் ,கோயம்பேடு- ஆவடி ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோயம்பேடு ஆவடி மெட்ரோ சேவைகளுக்கான விரிவாக திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரி சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மெட்ரோ ரயில் பணிகள் 2028 ஆம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.