தமிழக போக்குவரத்து துறைக்கு நவீன வடிவமைப்புடன் கூடிய 100 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக போக்குவரத்து துறையில் காலநிலை மற்றும் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் போக்குவரத்து பயன்பாட்டிற்கு நவீன வடிவமைப்புடன் கூடிய தாழ்தள மின்சார பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. அந்த வகையில் தற்போது 100 ஏசி மின்சார பேருந்துகள் வாங்குவதற்காக அரசு டெண்டர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மின்சார பேருந்துகள் உடன் சார்ஜிங் தீர்வு மற்றும் டிப்போ மேம்பாடு பணிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி எலக்ட்ரிக் ஏசி பஸ் வழங்கும் நிறுவனம் சார்ஜிங் மையம் மற்றும் சர்வீஸ் மையம் அனைத்தையும் அமைத்து தரவேண்டும் என கூறப்பட்டுள்ளது. இதில் பங்கு பெறுவதற்கு தகுதியான ஆவணங்களுடன் ஆன்லைனில் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.