தமிழகத்தில் 12 ஒன்றியங்களில் ஸ்கிம்டு பால் பவுடரை விற்க ஆவின் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது.
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் வாயிலாக தினமும் 40 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்த பால் கொழுப்பு சத்து அடிப்படையில், தரம் பிரிக்கப்பட்டு, பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. உபரியாக இருக்கும் பாலில் இருந்து வெண்ணெய்யை பிரித்து எடுத்த பிறகு, திடச்சத்து உள்ள பாலை உயர்வெப்பத்தில் கொதிக்கவைத்து பவுடராக மாற்றுகின்றனர். இதுவே ஸ்கிம்டு பால் பவுடர் ஆகும்.
இந்நிலையில், சேலம், நாமக்கல், திருச்சி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள 12 ஒன்றியங்களில் 366 டன்கள் ஸ்கிம்டு பால் பவுடர் விற்க ஆவின் நிர்வாகம் டெண்டர் கோரியுள்ளது. இதற்கு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆவின் நிர்வாகத்தின் இந்த செயல்பாடுகள், வரும் மாதங்களில் ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட வழிவகுக்கும் என்று பால் முகவர்கள் நலச்சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.