அமெரிக்காவில் 6.8 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அதே சமயம் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் களமிறங்கியுள்ளார். அமெரிக்காவில் பொதுமக்கள் தேர்தல் நாளுக்கு முன்பே நேரடியாகவோ அல்லது தபால் மூலம் வாக்களிக்க முடியும். இது வேலை, உடல்நல பிரச்சினைகள் மற்றும் பயணம் போன்ற காரணங்களால் வாக்களிக்க முடியாதவர்களுக்கு உதவியாக இருக்கிறது. கடந்த சில வாரங்களில், அமெரிக்காவின் பல மாநிலங்களில் முன்கூட்டிய வாக்குப்பதிவு செயல்முறை தொடங்கியது. இதில் 6.8 கோடி வாக்காளர்கள் முன்கூட்டியே வாக்களித்துள்ளனர். இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.














