2024 ஆம் ஆண்டுக்கான பசுமை நோபல் விருது ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தெரேசா விசெண்டேவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐரோப்பாவின் மிகப்பெரிய உப்பு நீர் தடாகமான மார் மெனோர் ஐ பாதுகாப்பதற்காக பிரத்தியேக சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை இயற்றுவதற்காக தெரேசா விசெண்டே கடுமையாக போராடினார். இதற்காக அவருக்கு கிரீன் நோபல் விருது வழங்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கல் மற்றும் தடாகத்தில் கொட்டப்படும் கழிவுகள் ஆகியவற்றால் மார் மெனோர் தடாகம் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த 2019 ல் தடாகத்தில் இருந்த ஆக்சிஜன் வெளியேறி, லட்சக்கணக்கான மீன்கள் செத்து மிதக்க ஆரம்பித்தன. இந்த நிலையில், சுற்றுச்சூழல் ஆர்வலரான தெரேசா விசெண்டே, தடாகத்தை பாதுகாப்பதற்கான சட்ட மசோதாவை 2020 இல் தாக்கல் செய்தார். மசோதாவுக்கு ஆதரவாக 640000 பேரிடம் கையெழுத்து வாங்கி, 2022 ஆம் ஆண்டு சட்ட வரைவு மசோதாவை நிறைவேற்ற செய்தார். இந்த நிலையில் பசுமை நோபல் வருது அறிவிக்கப்பட்டதற்கு, இயற்கையை பாதுகாப்பதற்கான சட்டங்களை கொண்டு வருவது மிகவும் அவசியம் என்று அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.