தெலங்கானா மாநிலத்தில் நேற்று இரவு அடுக்குமாடி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 4 சிறுமிகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
தெலங்கானாவின் செகந்திராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 7வது மற்றும் 8வது மாடியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று தீயணைப்பு படையினர் கட்டிடத்தில் சிக்கியவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட நிலையில் கட்டிடத்தில் இருந்த 11 பேர் மீட்கப்பட்டனர். அதில் 4 சிறுமிகள் உட்பட 6 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தெலுங்கானா மாநிலத்தின் வாரங்கல் மற்றும் கம்மம் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் கட்டிடத்தின் உள்ளே யாரேனும் சிக்கியுள்ளார்களா என்பதில் மீட்பு குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.