இன்று சுமார் 270 அடி அகலம் உள்ள விண்கல் ஒன்று பூமிக்கு மிகவும் நெருக்கமாக வரவுள்ளது. இது குறித்து ஐரோப்பிய விண்வெளி மையம் சவால் ஒன்றை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விண்கல், பூமிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தலாம் என்று அஞ்சப்படுகிறது. எனவே, நாசா இந்த விண்கல் குறித்து அபாயகரமான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று சுமார் 686000 மில்லியன் கிலோமீட்டர் தொலைவிற்கு இந்த விண்கல் வரவுள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையில் உள்ள தூரத்தைப் போன்ற இருமடங்கு தூரம் ஆகும். மேலும், மணிக்கு சுமார் 21276 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த விண்கல் பயணிக்கிறது. இதனால், பூமியின் புவி ஈர்ப்பு விசைக்குள் இது ஈர்க்கப்படலாம் என அஞ்சப்படுகிறது. Asteroid 2015 RN35 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், அப்போலோ குடும்பத்தை சேர்ந்ததாகும்.