சூரியனில், பூமியை விட 4 மடங்கு பெரிய கரும்புள்ளி - வெறும் கண்களால் பார்க்க முடியும் என விஞ்ஞானிகள் தகவல்

January 19, 2023

சூரியனில், பூமியை விட 4 மடங்கு பெரிய கரும்புள்ளி ஒன்று பூமியை நோக்கியபடி உள்ளது. AR3190 என்று அந்த கரும்புள்ளிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த கரும்புள்ளியின் அளவு மிகப்பெரியதாக உள்ளதால், இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய கரும்புள்ளி நிகழ்வு, இத்தனை வருடங்களில் இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. வெறும் கண்களாலேயே காணக்கூடிய இந்த அரிய நிகழ்வால் விஞ்ஞானிகள் மிகவும் ஆர்வமடைந்துள்ளனர். அதே வேளையில், இந்த கரும்புள்ளி மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஒருவேளை இந்த […]

சூரியனில், பூமியை விட 4 மடங்கு பெரிய கரும்புள்ளி ஒன்று பூமியை நோக்கியபடி உள்ளது. AR3190 என்று அந்த கரும்புள்ளிக்கு பெயரிடப்பட்டுள்ளது. இந்த கரும்புள்ளியின் அளவு மிகப்பெரியதாக உள்ளதால், இதனை வெறும் கண்களாலேயே பார்க்க முடிவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இத்தகைய கரும்புள்ளி நிகழ்வு, இத்தனை வருடங்களில் இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. வெறும் கண்களாலேயே காணக்கூடிய இந்த அரிய நிகழ்வால் விஞ்ஞானிகள் மிகவும் ஆர்வமடைந்துள்ளனர்.

அதே வேளையில், இந்த கரும்புள்ளி மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது. ஒருவேளை இந்த கரும்புள்ளி வெடிக்க நேரிட்டால், மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இந்த கரும்புள்ளி வெடிப்பு ஏற்படும் பட்சத்தில், எக்ஸ் கிளாஸ் சோலார் புயல்கள் பூமியைத் தாக்கும் எனவும், அதனால் தொலைத்தொடர்பு சேவைகள் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஜிபிஎஸ் சேவைகள், செயற்கைக்கோள் இணைப்பு தொடர்பான சேவைகள், மின்சார இணைப்புகள், பேஸ்மேக்கர், வென்டிலேட்டர் உள்ளிட்ட மின்னணு சாதனங்களின் செயல்பாடு ஆகிய அனைத்துமே பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu