பாகிஸ்தானில் பழங்குடி பகுதிகளில் நான்கு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றது. இதில் ஒன்பது பேர் உயிரிழந்தனர்.பாகிஸ்தானின் வடமேற்கு பகுதி பழங்குடி கிராமங்களில் பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றது. இதில் வடக்கு வஜிரிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ரஸ்மாக் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் வானா என்கிற பகுதி மற்றும் பௌஜர் பழங்குடியினர் மாவட்டத்தில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் மூலம் மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த சில மாதங்களாக பாகிஸ்தானில் தெக்ரிக் - இ - தலிபன பாகிஸ்தான் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகள் தொடர் தாக்குதல் சம்பவங்களை நடத்தி வருகிறது. இதில் பெரும்பாலும் பொதுமக்கள் இலக்குகளாக மாறி தாக்குதல் நடத்தப்பட்டு பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.














