ஜம்மு காஷ்மீர், சோனமார்க் பகுதியில் பயங்கவதிகளில் திடீர் தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள சோனமார்க் பகுதியில் சுரங்கப்பாதை கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஒரு டாக்டர் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளன. மேலும் மாநில முதல்வர் உமர் அப்துல்லா, இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார், புலம்பெயர் தொழிலாளர்கள் மீது நடத்தியது கொடூரமான செயல் என குறிப்பிட்டுள்ளார். இதனை தொடர்ந்து பாதுகாப்பிற்காக பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.