கிஷ்த்வாரில் பயங்கரவாதிகள் கிராம பாதுகாப்பு குழு உறுப்பினர்களை கடத்தி கொலை செய்துள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மாலை கிராம பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த இருவரை பயங்கரவாதிகள் கடத்தி கொலை செய்தனர். நசீர் அகமது மற்றும் குல்தீப் யாதவ் என்ற இருவரும் ஒஹ்லி குந்த்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களின் கால்நடைகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்லும் போது பயங்கரவாதிகள் அவர்களை கடத்தி கொலை செய்துள்ளனர். "ஜெய்ஷ்-இ-முகமது" அமைப்பின் காஷ்மீர் டைகர்ஸ் இந்த கொலைக்கு பொறுப்பேற்றுள்ளது. மாநில துணைநிலை ஆளுநர் மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா இதனை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.