பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் நேரடியாக காரணம் என இந்தியா குற்றம்சாட்டி, இருநாட்டு உறவுகளை முற்றாக துண்டித்தது. இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தியுள்ளது. இதற்கு பதிலாக பாகிஸ்தான் சிம்லா ஒப்பந்தத்தை தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்துள்ளது. இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதை தொடர்ந்து இந்திய வீரர்கள் கடும் பதிலடி கொடுத்தனர், இதனால் எல்லை பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. இந்தியா, ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் மறைவிடங்களை தீவிரமாக தேடிவருகிறது. குப்வாரா மாவட்டத்தில் செடோரி நலா காட்டுப்பகுதியில் SOG மற்றும் ராணுவத்துடன் இணைந்து சிறப்பு இயக்கம் நடத்தி, பயங்கரவாதிகள் மறைவிடங்களை தாக்கி அழித்து, ஏ.கே.47 துப்பாக்கிகள் மற்றும் வெடிப்பொருட்களை கைப்பற்றியது.