பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 பேர் உயிரிழந்ததுடன், 14 பேர் படுகாயமடைந்தனர்.
பாகிஸ்தான் தலிபான் அமைப்பை சேர்ந்த தற்கொலைப் படையினர் கராச்சி துறைமுகத்தில் உள்ள போலீஸ் வளாகத்திற்குள் நுழைந்து அங்கிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் அலுவலக கட்டிடத்தின் வழியாக தரையிறங்கி பல மணிநேரம் அவர்களுடன் துப்பாக்கிச் சண்டை நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு போலீசார், ஒரு ரேஞ்சர் மற்றும் ஒரு சுகாதார பணியாளர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். தொடர் துப்பாக்கிச்சூட்டில் மூன்று பயங்கரவாதிகளையும் பாதுகாப்புப்படையினர் சுட்டுக் கொன்றனர்.