இருமல் மருந்து ஏற்றுமதியாளர்கள் ஜூன் 1 முதல் மத்திய அரசு பரிசோதனை மையங்களில் சோதனை செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் வருகிற ஜூன் 1 ஆம் தேதி முதல் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இருமல் மருந்தின் மாதிரிகள் அரசு ஆய்வகத்தில் சோதனை செய்யப்படுவது அவசியமாக்கப்படுகிறது. சண்டிகர், கொல்கத்தா, சென்னை, ஹைதராபாத், மும்பை, குவாஹாட்டி ஆகிய நகரங்களில் மத்திய அரசின் ஆய்வகங்கள் ஏதேனும் ஒன்றில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் பெறப்பட வேண்டும். ஏற்றுமதியாளர்கள் தங்களின் மருந்து தயாரிப்புகளை முறையாக மத்திய அரசு ஆய்கங்களில் பரிசோதனைக்கு உட்படுத்துகிறார்கள் என்பதை அந்தந்த மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.