தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.பாங்காக்கில் உள்ள பிரபல வணிக வளாகம் ஒன்றில், 14 வயது சிறுவன் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டுள்ளான். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வளாகத்திற்குள் இருந்த பொதுமக்களை நோக்கி சரமாரி துப்பாக்கிச் சூட்டில் சிறுவன் ஈடுபட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் 6 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், 3 பேர் உயிரிழந்துள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட சிறுவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறுவனிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.