தாய்லாந்து திருவிழாவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டதில் 3 பேர் பலியாகினர்.
தாய்லாந்தின் தக் மாகாணத்தில் உள்ள உம்பாங் நகரில் நடந்த வருடாந்திர திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். விழாவில் கைகலப்பு ஏற்பட்ட போது, சிலர் வெடிகுண்டு வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அங்கு இருந்தவர்கள் நாலாபுறமும் ஓடினர். இந்த வெடிப்பில் 3 பேர் உடல் சிதறி பலியாகினார்கள். மேலும் 50-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பினர். இதில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த சம்பவம் குறித்து தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ரா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.