சீன சுற்றுலா பயணிகளுக்கு விசா தேவை இல்லை என்று தாய்லாந்து தெரிவித்துள்ளது.
தாய்லாந்து தன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன் அண்டை நாடான சீனாவில் இருந்து ஆண்டு தோறும் ஏராளமான பயணிகள் வருகிறார்கள். கொரோனாவுக்கு முன்பு ஒரு கோடிக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து சென்றனர்.பின்னர் இந்த எண்ணிக்கை குறைந்தது. தற்போது இயல்பு நிலை திரும்பி வருவதால் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் தற்போது கடுமையான விசா கட்டுப்பாடுகளால் கடந்த ஆறு மாதங்களில் இதுவரை 16 லட்சம் சுற்றுலா பயணிகள் மட்டுமே வந்துள்ளனர். எனவே சுற்றுலா துறையை மீட்டெடுக்க இந்தோனேசியா அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி வருகிற 25ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி 29ஆம் தேதி வரை சீனாவில் இருந்து சுற்றுலா வருபவர்களுக்கு விசா பெறுவதில் விலக்கு அளிக்கப்படுகிறது.என தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்த தவிசின் அறிவித்தார். இந்த உத்தரவு கசகஸ்தான் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கும் பொருந்தும் என்று தாய்லாந்து சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.