சட்டசபை கூட்டம் 13-ந்தேதி வரை நடைபெறும் என்று அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்ட சபையின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கூடியது. இதில் கவர்னர் ஆர்.என்.ரவி பங்கேற்று உரை நிகழ்த்தினார். இதையடுத்து இன்று சட்டசபை கூட்டம் முடிந்ததும் அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் சட்டசபை கூட்டத்தொடரை எத்தனை நாள் நடத்துவது என்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. விவாதத்திற்கு பிறகு வருகிற 13-ந் தேதிவரை சட்டசபை கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டது.