கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மத்திய அரசு இன்று ஆலோசனை நடத்துகிறது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவு கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில், அனைத்து மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். அப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும் என்றும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.