குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் மார்ச் மாதம் முதல் அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை கொண்டு வந்தது. இந்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.இதில் 100க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அதனால் இந்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகளை மத்திய அரசு வெளியிடவில்லை. அதனை தொடர்ந்து இந்த சட்டம் அமலுக்கு வரவில்லை. இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும் முன்பு குடியுரிமை திருத்த சட்டம் மார்ச் மாதம் முதல் அமல்படுத்த மத்திய உள்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்