மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர்

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார். முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 லட்சம் ஏக்கரில் ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.மேலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், கொத்துக்கலப்புகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், […]

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நேற்று வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் 2 லட்சம் ஏக்கரில் ரூபாய் 20 கோடி நிதி ஒதுக்கீட்டில் 4000 மெட்ரிக் டன் பசுந்தாள் உர விதைகளை விவசாயிகளுக்கு வழங்கி மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார்.மேலும் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக வேளாண்மை பொறியியல் துறை சார்பில் குறைந்த வாடகையில் டிராக்டர்கள், கொத்துக்கலப்புகள் மற்றும் ரோட்டவேட்டர்களை வழங்கிடும் வகையிலும், கிராமப்புற இளைஞர்களுக்கு டிராக்டர் இயக்குவதற்கு பயிற்சி அளிக்கும் வகையிலும் கொடி அசைத்து டிராக்டர்களை தொடங்கி வைத்தார்.

இந்த மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் 206 கோடி ரூபாயில் 22 இனங்களுடன் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதற்கட்டமாக 2024- 2025 ஆம் ஆண்டில் இரண்டு லட்சம் ஏக்கரில் 20 கோடி மதிப்பில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu