நாட்டின் முதலாவது தனியார் ராக்கெட்டான விக்ரம்- எஸ் நாளை விண்ணில் ஏவப்படுகிறது.
ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் விக்ரம் எஸ் என்ற ராக்கெட்டை தயாரித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி திட்டத்தின் தந்தையான விக்ரம் சாராபாய் நினைவாக, இந்த ராக்கெட்டுக்கு விக்ரம்-எஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் தொடர்ந்து பல ராக்கெட்டுகளை ஸ்கைரூட் நிறுவனம் ஏவ இருக்கிறது. விக்ரம்-எஸ் ராக்கெட்டைத் தொடர்ந்து விக்ரம் வரிசையின் அடுத்த 3 ராக்கெட்டுகள் அடுத்த ஆண்டு ஏவப்பட உள்ளன.
ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 3 சிறிய ரக செயற்கைக்கோள்களுடன், நாளை காலை 11.30 மணிக்கு விக்ரம்-எஸ் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது.