எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திர விவரங்கள் தேர்தல் ஆணையம் மூலம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
எஸ்பிஐ தேர்தல் பத்திரங்கள் தொடர்பான பிரமாண பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதனை தொடர்ந்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ளது. அதில் 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி வரையில் மொத்தம் 22,217 தேர்தல் பத்திரங்கள் தேர்தல் ஆணையத்தின் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்களின் விவரங்களும், அதனை பணமாக மாற்றிய கட்சிகளின் விவரங்களும் அடங்கியுள்ளன. அதில் 22,030 தேர்தல் பத்திரங்கள் அரசியல் கட்சிகளின் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 187 பத்திரங்கள் பிரதமரின் தேசிய நிவாரண நிதி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.