தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் வெளியீடு

September 28, 2023

ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், மாற்றம், திருத்தம் ஆகிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அடுத்து ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பணிகள் தொடங்கும் நாள் அன்று […]

ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி முதல் முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கம், மாற்றம், திருத்தம் ஆகிய விண்ணப்பங்கள் பெறப்பட்டு கள ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அடுத்து ஜனவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தப் பணிகள் தொடங்கும் நாள் அன்று சரிபார்ப்பு வசதிக்காக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இது வரும் அக்டோபர் 17ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இதன் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 17ஆம் தேதிக்கு பதிலாக 27ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. இதற்கான அட்டவணையை இந்திய தேர்தல் கமிஷன் ஆணையம் வெளியிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியிடும் அன்று திருத்தப்பணிகள் தொடங்கப்படுகின்றன. இதற்காக வாக்குச்சாவடிகள் பொதுமக்கள் வசதிக்காக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. டிசம்பர் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படும். ஜனவரி மாதம் இறுதியில் வாக்காளர் பட்டியல் மக்கள் பார்வைக்காக வெளியிடப்பட உள்ளது. மேலும் ஆதார் இணைப்புக்கான விண்ணப்பங்களும் அளிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu