'அக்னிபத்' திட்டத்திற்கான நுழைவுத்தேர்வு அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கும்

October 12, 2022

ராணுவத்தில் 'அக்னி பத்' என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நுழைவுத்தேர்வு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது. நம் ராணுவத்தில் அக்னி வீரர்கள் என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. 'அக்னிபத்' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களில் 25 சதவீதம் பேர் நான்கு ஆண்டுகளுக்குப் பின் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர். இத்திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நாடு முழுதும் நடந்து […]

ராணுவத்தில் 'அக்னி பத்' என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நுழைவுத்தேர்வு வரும் 16ம் தேதி நடத்தப்படுகிறது.

நம் ராணுவத்தில் அக்னி வீரர்கள் என்ற புதிய வேலைவாய்ப்பு திட்டம் உருவாக்கப்பட்டது. 'அக்னிபத்' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ், நான்கு ஆண்டு கால ஒப்பந்தத்தில் ஆண்டுக்கு 50 ஆயிரம் வீரர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இவர்களில் 25 சதவீதம் பேர் நான்கு ஆண்டுகளுக்குப் பின் முப்படைகளில் சேர்த்து கொள்ளப்படுவர்.

இத்திட்டத்தின் கீழ், ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் பணி நாடு முழுதும் நடந்து வருகிறது. இந்த பணிக்கான பொது நுழைவு தேர்வு வரும் 16ம் தேதி நடக்கிறது. அன்றைய தினம், ஜெயா நகரில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா விளையாட்டு மைதானத்தில் மாலை 4:00 மணிக்கு தேர்வு நடக்கிறது. மொத்தம் 1,900 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

அனைவரும் தங்குவதற்கு சுற்று வட்டாரத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் 10 மொபைல் கழிப்பறைகள், ஒரு ஆம்புலன்ஸ், மின் ஜெனரேட்டர், மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu