கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி மெட்ரோ ரயில் டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னையில் இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் தினந்தோறும் 2.60 லட்சம் முதல் மூன்று லட்சம் பேர் வரை பயணம் செய்கின்றனர். இந்நிலையில் ஏற்கனவே பயணிகள் எளிதாக டிக்கெட் எடுக்கும் வகையில் கியூ ஆர் கோடு குறியீடு அல்லது பயணச்சீட்டு முறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட்களை பயன்படுத்தி டிக்கெட் எடுக்கும் வசதியை விரைவில் மெட்ரோ ரயில் நிலையம் அறிமுகப்படுத்த உள்ளது. ஜிபே ஸ்கேனர் பயன்படுத்தி டிஜிட்டல் டிக்கெட் எடுக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. விரைவில் இதற்கு ஏற்ப தொழில்நுட்ப மாற்றம் செய்யப்படும் எனவும் மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணத்திற்கான கட்டணம் மட்டுமே பிடித்தம் செய்யப்படும். ஜிபே முறையில் ஸ்கேனர் வாயிலாகவும் கட்டணம் செலுத்தி பயணிக்கலாம். புதிய வசதிக்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இது இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.