தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து வருகிற ஐந்தாம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.
தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்வதும் மற்றும் அவர்களது படகுகளை சிறை பிடிப்பதும் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. கடந்த வாரம் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 18 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்திருந்த நிலையில் தற்போது மீண்டும் 25 மீனவர்கள் சிறை படிக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்தும், மீனவர்கள் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க கோரியும் மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர் கடலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். மேலும் வருகிற 5ம் தேதி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் மீனவர்கள் அறிவித்துள்ளனர். இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட நாட்டுப் படகு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்