பாராளுமன்றத் தேர்தலில் ஐந்தாம் கட்ட தேர்தல் வருகிற 20ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் நாளையுடன் ஓய்வு பெறுகிறது.
நாட்டில் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் இதுவரை ஏப்ரல் 19ஆம் தேதி முதல் கட்ட தேர்தலும், ஏப்ரல் 26 ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலும், மே 7-ஆம் தேதி மூன்றாம் கட்ட தேர்தலும், மே 13ஆம் தேதி நான்காம் கட்ட தேர்தலும் நடைபெற்று முடிந்தது. இதுவரை நடந்த நான்கு கட்ட தேர்தல்களிலும் மொத்தம் 67 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்படி மே 20 ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தலும், மே 25ஆம் 6 ஆம் கட்ட தேர்தல் மற்றும் ஜூன் ஒன்றாம் தேதி 7ம் கட்ட தேர்தலும் நடைபெறுகிறது. தற்போது நடைபெற உள்ள ஐந்தாவது கட்ட தேர்தல் பிரச்சாரம் 49 தொகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வரும் வேளையில் நாளையுடன் பிரச்சாரம் ஓய்வு பெறுகிறது. மேலும் தேர்தலையொட்டி 49 தொகுதிகளிலும் ஓட்டு சாவடிகளில் மூன்று அடுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன