குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

December 5, 2022

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 63.30% வாக்குகள் பதிவாகின. 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 93 தொகுதிகளில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. […]

குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.

குஜராத் சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 182 தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலில் 63.30% வாக்குகள் பதிவாகின. 93 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட தேர்தல் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த 93 தொகுதிகளில் 833 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும், இயந்திரங்கள் காவல்துறை பாதுகாப்புடன் ஸ்டிராங் ரூம்மில் வைக்கப்படும். குஜராத் மற்றும் இமாச்சல் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 8ம் தேதி எண்ணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu