நான்காவது 'வந்தே பாரத்' ரயில் இம்மாதம் இறுதியில் தயார்

September 14, 2022

நான்காவது வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இந்த மாத இறுதிக்குள் தயாராகி விடும் என, சென்னை ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்தனர். புதுடில்லி -- வாரணாசி, புதுடில்லி -- வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வரும் 'வந்தே பாரத்' ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுதும் […]

நான்காவது வந்தே பாரத் அதிவிரைவு ரயில் இந்த மாத இறுதிக்குள் தயாராகி விடும் என, சென்னை ஐ.சி.எப்., அதிகாரிகள் தெரிவித்தனர்.

புதுடில்லி -- வாரணாசி, புதுடில்லி -- வைஷ்ணவ தேவி இடையே இயக்கப்பட்டு வரும் 'வந்தே பாரத்' ரயில்களுக்கு, பயணியரிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதையடுத்து, நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், வந்தே பாரத் ரயில்களை இயக்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் 75 வந்தே பாரத் ரயில்களை நாடு முழுதும் இயக்குவதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

இதுகுறித்து ஐ.சி.எப். அதிகாரிகள் கூறுகையில், சிறிய தொழில்நுட்ப மாற்றங்களோடு சென்னை ஐ.சி.எப்., தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட மூன்றாவது வந்தே பாரத் ரயில் ஆமதாபாத், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை இடையே மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டு, சோதனை ஓட்டம் நிறைவு செய்துள்ளது. அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் 400 வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்க ரயில்வே இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்கிடையே ஐ.சி.எப்., ஆலையில் நான்காவது வந்தே பாரத் தயாரிப்பு பணியில் தற்போது 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன.

இந்த மாத இறுதிக்குள், இந்த ரயில் தயாரிப்பு பணி முடிந்து விடும். இந்த ரயிலை எந்த தடத்தில் இயக்குவது என்பது குறித்து ரயில்வே வாரியம் முடிவு செய்யும் என்று அவர்கள் கூறினர்.

 

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu