உறைபனியால் உறைந்த உதகை தாவரவியல் பூங்கா

January 11, 2023

உதகையில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது. நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். இந்தாண்டு அதிக அளவு மழை நாட்களைக் கொண்டிருந்ததால் உறைபனி தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. உறைபனி தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவானது. நேற்று அதிகாலை உதகை தாவரவியல் பூங்கா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை […]

உதகையில் உறைபனியின் தாக்கம் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் வழக்கமாக நவம்பர் மாத தொடக்கத்தில் உறைபனி தொடங்கி மார்ச் முதல் வாரம் வரை நீடிக்கும். இந்தாண்டு அதிக அளவு மழை நாட்களைக் கொண்டிருந்ததால் உறைபனி தள்ளிப்போனது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நீலகிரி மாவட்டத்தில் உறைபனியின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. உறைபனி தொடங்கிய முதல் நாளே வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸாக பதிவானது.

நேற்று அதிகாலை உதகை தாவரவியல் பூங்கா மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெப்பநிலை 2 டிகிரியாக பதிவானது. புல்வெளிகள் அனைத்தும் உறைபனியால் வெள்ளிக்கம்பளம் விரித்தாற்போல் காட்சியளித்தன. இதுதொடர்பாக மக்கள் கூறுகையில், தேயிலை உள்ளிட்ட பயிர்கள் கருகி வருகின்றன. தாவரங்கள் மற்றும் புல்வெளிகளும் தொடர்ந்து கருகி வருவதால் வனங்களில் பசுமை குறைந்து வனவிலங்குகள் இடம் பெயரவும் வாய்ப்புள்ளது என்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu