இன்சாட் -3 டி எஸ் என்ற செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிப்ரவரி 15ஆம் தேதி தயார் நிலையில் உள்ள ஜி.எஸ்.எல்.வி எஃப்-14 ராக்கெட்டில் பொருத்தி விண்ணில் செலுத்த இஸ்ரோ தயாராகி வருகிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்சாட் -3டி எஸ் என்ற செயற்கைக்கோள் பெங்களூருவில் வடிவமைத்துள்ளது. இந்நிலையில் இந்த செயற்கைக்கோளை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பிப்ரவரி 17ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு தயார் நிலையில் உள்ள ஜி.எஸ்.எல்.வி. எஃப் - 14 ராக்கெட்டில் பொருத்தி விண்ணில் செலுத்த தயாராகி வருகின்றது. தற்போதுள்ள சுற்றுச் பாதையில் இன்சாட் - 3 டி மற்றும் 3 டி.ஆர் செயற்கைக்கோள்கள் காலநிலை தரவுகளை தெரிந்து கொள்வதற்கான சேவைகளை வழங்கி வருகிறது. மேலும் வானிலை முன்னறிவிப்பு திறன்களை அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவைதவிர இது பேரழிவு எச்சரிக்கை அமைப்புகளுக்கான தகவல்களை வழங்குவதுடன் முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் திறன்களையும் கொண்டுள்ளது.