ஜிகா வைரஸ் பரவல் கர்ப்பிணி பெண்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏடீஸ் என்ற கொசுவின் மூலம் பரவும் ஜிகா வைரஸ் மகாராஷ்டிராவில் பரவுவதை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இது கர்ப்பிணி பெண்களை அதிகமாக பாதித்து பாதிப்பை ஏற்படுத்துவதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே கர்ப்பிணி பெண்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டால் தீவிரமாக கண்காணிக்கும் படியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஜிகா வைரஸ் பாதிப்பு தீவிரமாக கண்காணிக்கப்படுவதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது