தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைப்பு

January 6, 2023

தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் உலகப் புகழ்பெற்ற தமிழ் நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசு அனுமதி நேற்று மதியம் கிடைத்ததை தொடர்ந்து போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது. இதில் சுமார் 700 காளைகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்ப்டடது. மேலும் மாடுபிடி வீரர்கள் சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் […]

தச்சங்குறிச்சியில் இன்று நடைபெற இருந்த ஜல்லிக்கட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் தச்சன்குறிச்சி கிராமத்தில் உலகப் புகழ்பெற்ற தமிழ் நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற இருந்தது. இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டி நடத்துவதற்கான அரசு அனுமதி நேற்று மதியம் கிடைத்ததை தொடர்ந்து போட்டிக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்படைந்துள்ளது. இதில் சுமார் 700 காளைகள் கலந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்ப்டடது. மேலும் மாடுபிடி வீரர்கள் சுமார் 250க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொள்ள இருந்தனர்.

இந்நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்ைத பார்வையிட்டார். பின்னர் அதிகாரிகள், ஊர் மக்களிடம் பேசினார். இதை தொடர்ந்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின் படி விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை. நீதிமன்ற வழிகாட்டுதல் படி ஏற்பாடுகள் செய்த பின்னர் வேறு ஒரு தேதியில் அனுமதி வழங்கப்படும். பாதுகாப்பு நலன் கருதி ஒத்தி வைக்கப்படுவதாகவும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu