பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக நேற்று புதுடில்லி வந்தார். அவரை நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வரவேற்றார். அவரது பயணம் இந்தியா - பூடான் இடையிலான தனித்துவமான உறவை மேலும் வலுவாக்கும் என ஜெய்சங்கர் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோரை பூடான் மன்னர் இன்று சந்தித்து பேச உள்ளார்.