புதிய நாடாளுமன்ற கட்டிடம் இம்மாத இறுதியில் திறக்கப்படவுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி 9 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2014-ம் ஆண்டு மே 26-ம் தேதி பிரதமராக பதவியேற்றார். இதை முன்னிட்டு நாடு முழுவதும் மே 30-ம் தேதி முதல் ஒரு மாத காலத்துக்கு சிறப்பு பிரச்சார பேரணி மேற்கொள்ள திட்டமிடபட்டுள்ளது. மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இறுதி கட்டபணிகள் நடைபெற்று வருகின்றன. அதை இம்மாத இறுதியில் பிரதமர் மோடி திறந்து வைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அடிக்கல் நாட்டினார். 4 மாடிகள் கொண்ட இந்த புதிய நாடாளுமன்றம் ரூ.970 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்திய ஜனநாயக பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்த புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரம்மாண்ட அரசியல் சாசன அரங்கும் அமைக்கப்பட்டுள்ளது.