தமிழகத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட இருக்கின்றன.
செப்டம்பர் 30ம் தேதிக்கு மியூச்சுவல் ஃபண்ட், டீமேட் மற்றும் டிரேடிங் கணக்குகளுக்கு நாமினி பெயரை குறிப்பிடுவது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயல்படாத பட்சத்தில் கணக்குகள் முடக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து கணக்குகளுக்கும் பொருந்தும். அடுத்ததாக டி.சி.எஸ் கட்டணங்களை 5 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி உள்ளது. அதேபோல் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் இனி கிரெடிட் கார்டு மூலம் 7, லட்சத்திற்கும் மேல் செலவு செய்யும் பணத்திற்கு 20 சதவிகித வரி செலுத்த வேண்டும். அதற்கு குறையும் பட்சத்தில் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். கல்விக்காக கடன் பெறுபவர்களுக்கு 7 லட்சத்திற்கும் மேல் 0.5% குறைந்த டி.சி.எஸ் வரி விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவ மற்றும் கல்வி போன்ற செலவுகள் படிக்கும் பட்சத்தில் டி.சி.எஸ் 5 சதவீதமாக வசூலிக்கப்பட உள்ளது. இதைத்தவிர வருங்கால வைப்பி நிதியனா சுகன்யா சம்ரித்தி யோஜனா, தபால் நிலையம் மற்றும் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்கள் ஆதார் எண்ணை செப்டம்பர் 30க்குள் இணைக்க வேண்டும். மத்திய அரசு அறிவிப்பின்படி 2000 ரூபாய் நோட்டுகள் செப்டம்பர் 30ம் தேதி வரை மட்டுமே புழக்கத்தில் இருக்கும் .அதேபோல் அக்டோபர் 1ஆம் தேதி முதல் பத்திரப்பதிவுக்கு வரும் ஆவணங்களில் புதிய சொத்துக்கள் குறித்த புகைப்படங்களை இணைப்பது கட்டாயமாகப்பட்டுள்ளது. பழனி முருகன் கோவில் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு திருத்த திட்டம் 2023 அக்டோபர் முதல் அமலுக்கு வரவுள்ளது. இதன் மூலம் ஒரே ஆவணமாக பிறப்புச் சான்றிதழ் பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஆதார் பெறுவது மற்றும் அரசு வேலைகள் சேர்வதற்கு பிறப்புச் சான்றிதழ்
கட்டாயமாகப்படுகிறது.