கடந்த 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் 75 புதிய விமானங்கள் திறக்கப்பட்டுள்ளன. இவை 2030க்குள் விமான நிலையங்கள் எண்ணிக்கை 300 ஆக அதிகரிக்கும் என ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு நாளை சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளார். இதற்கு வால்மீகி சர்வதேச விமான நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இதுவரை உத்திர பிரதேசத்தில் ஒன்பது விமான நிலையங்கள் இருக்கிறது. நாளை முதல் 10 விமான நிலையமாக மாறுகிறது. இவை அடுத்த ஆண்டு மேலும் 9 விமான நிலையங்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் நாடு முழுவதும் 75 விமான நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இது 2030க்குள் 300 விமான நிலையங்களாக மாறும் என மத்திய விமான போக்குவரத்து துறை மந்திரி ஜோதிராதித்யா சிந்தியா கூறியுள்ளார்.