அமெரிக்காவில் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ட்ரம்ப் தோல்வி அடைந்தார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாக ட்ரம்ப் குற்றம் சாட்டினார். அத்துடன் பல மாகாணங்களில் வழக்கும் தொடுத்தார். அவை அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன. அமெரிக்காவில் தற்போது இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் ரிப்பப்லிக் கட்சிக்கும் ஜனநாயக கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ரிப்பப்லிக் கட்சியினர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பே அதிகம் என்று கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன.
ரிபப்ளிக் கட்சியைச் சேர்ந்த ட்ரம்ப் கடந்த வாரம் ஒரு பேட்டியின் போது நான் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்று கூறியிருந்தார். அதோடு நவம்பர் 15 ஆம் தேதி நான் ஃப்ளோரிடாவில் மிக முக்கியமான அறிவிப்பை வெளியிடவிருக்கிறேன் என்றார். அமெரிக்காவில் ஒரு நபர் இரண்டு முறை அதிபராக முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அனைவரும் தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இந்த முடிவுகள் பைடன் ஆட்சி மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது உறுதி என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.